PAGE 2

சிவப்பு கீரையும் பயன்பாடும்..!

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட கீரைகளை விட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில் அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது.

கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45 கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9 மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது.

முக்கியமாக கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது. கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது.

அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீரை வேகவைக்கும் போது சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

சிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்கள் 2கைப்பிடி சிவப்பு கீரைகளை எடுத்து சீராகும் வரை பிசைந்து அதில் 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்டெயனைடு சேர்க்கவும். பின்னர் தேன் மற்றும் முட்டை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பானத்தை வாரத்தில் ஒரு முறை குடிக்கலாம். வயிற்றுகடுப்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் குணமாகும். பின்னர் கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேகவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.
___________________________________________________________________________

தினமும் பிரட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்..!

மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட். இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது. நமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும். ஏனெனில் இதனால் பல தீங்குகளை பெறக்கூடும். இப்போது அந்த தீங்குகள் என்னவென்று பார்ப்போம்.

கார்போஹைட்ரேட் பெருமளவில் உள்ளது

பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்’ (brain fog) நோயை உண்டாக்கும். அதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவதால், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

க்ளுட்டன்/பசைத்தன்மை

பிரட்டில் உள்ள க்ளுட்டன் என்னும் பொருள் நிறைய நோய்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு பிரட் சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் ஏற்படுவது, உடற்குழி நோய்க்கான அறிகுறியாகும். இது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் இவ்வாறு ஒவ்வாமை நிலை ஏற்படுவோர், தமது உணவுப் பழக்கத்திலிருந்து பிரட்டை விலக்கி விட வேண்டும்.

பசி அடங்காது

ஒயிட் பிரட் சாப்பிடுவதா? ப்ரவுன் பிரட் சாப்பிடுவதா? என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினாலும் பசி அடங்குவதில்லை.

உடல் எடை அதிகரிக்கும்

பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

அதிகளவில் சோடியம் நிறைந்தது

பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.

பிரட்டில் ஊட்டச்சத்து கிடையாது

பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதுமட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா? என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்றவற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.
_____________________________________________________________________________

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
_________________________________________________________________________________________